Friday, January 21, 2011

ஒற்றை வார்த்தை


உன்னுடைய 
நினைவுகளிலிருந்து 
என்றும் தூக்கியெறிய முடியாதவளாக 
உன் கனவுகளின் துகள்களிருந்து 
நிராகரிக்க முடியாதவளாக 
நானிருக்கிறேன்.. 
ஒருபோதும் 
நீயிதை மறுத்துரைக்க முடியாது 
என்பதும் எனக்கு தெரியும் 
அந்த ஒற்றை வார்த்தைக்காகத்தான்   
இன்னும் நிற்கிறேன் 
உனது நிழலுக்கு முன்னால்... 

No comments:

Post a Comment