உன்னுடைய
நினைவுகளிலிருந்து
என்றும் தூக்கியெறிய முடியாதவளாக
உன் கனவுகளின் துகள்களிருந்து
நிராகரிக்க முடியாதவளாக
நானிருக்கிறேன்..
ஒருபோதும்
நீயிதை மறுத்துரைக்க முடியாது
என்பதும் எனக்கு தெரியும்
அந்த ஒற்றை வார்த்தைக்காகத்தான்
இன்னும் நிற்கிறேன்
உனது நிழலுக்கு முன்னால்...
No comments:
Post a Comment