இருட்டில்
சமயலறையில் இருந்து
படுக்கையறை வரை
தடவிச் சென்றுவிடுவேன்..
எங்கு என்ன பொருட்கள் இருக்கின்றன
என்று கண்டுபிடித்துவிடுவேன்..
என்று சொன்னேன்..
நானும் கண்டுபிடிக்கிறேன்..
அங்கேயே உட்கார்ந்திரு என்று
வாசலுக்குச் சென்று திரும்பி நின்று
கண்ணை மூடி
கையை நீட்டி வந்தாள்
அந்த இடத்தை விட்டு
அசையவில்லை நான்..
No comments:
Post a Comment