Friday, January 28, 2011

எறும்பு

எறும்புகளுக்கு தாகமெடுக்குமா?
தெரியவில்லை 
எறும்புகள் தண்ணீர் குடித்தும்
பார்த்ததில்லை..
எறும்புகள் எப்போது தூங்கும்
யாருக்கும் தெரியாது..
எறும்புகள் புறணி பேசுமா?
எறும்புகள் படம் பாருக்குமா?
பாட்டு கேட்குமா?
எறும்புகள் அழுமா? சிரிக்குமா?
எறும்புகள் கவிதை எழுதுமா?
புத்தகம் வாசிக்குமா?
எறும்புகளை பின் தொடரவும் முடியாது..
யோசித்து முடிவு செய்தேன்..
நாளை நானும் எறும்பாய் மாறுவதென..

No comments:

Post a Comment