Tuesday, January 25, 2011

அழிப்பான்


அமைதியிழந்த என் இரவினில்
மீண்டும் மீண்டும்
உள் நுழைந்து அழைக்கிறது
உன் நல்வார்த்தைகள்

கண்ணை மூடி
உறங்க முயற்சிக்கிறேன்
உனது வார்த்தைகள் சூழ்ந்து நிற்கின்றன
உனது குரல் தட்டி எழுப்புகிறது

ஒரு அழிப்பான் கொண்டு
அனைத்தையும் அழித்துவிட முனைந்தால்
என்னால் எழுதமுடியும்
மீண்டும்
உனக்கும் என்க்குமான காதலை

No comments:

Post a Comment