அமைதியிழந்த என் இரவினில்
மீண்டும் மீண்டும்
உள் நுழைந்து அழைக்கிறது
உன் நல்வார்த்தைகள்
கண்ணை மூடி
உறங்க முயற்சிக்கிறேன்
உனது வார்த்தைகள் சூழ்ந்து நிற்கின்றன
உனது குரல் தட்டி எழுப்புகிறது
ஒரு அழிப்பான் கொண்டு
அனைத்தையும் அழித்துவிட முனைந்தால்
என்னால் எழுதமுடியும்
மீண்டும்
உனக்கும் என்க்குமான காதலை
No comments:
Post a Comment