எப்போது திரும்புவாய் எனும்
உத்தேசமின்றி
காத்திருக்கச் சொல்கிறாய்..
நீ வரும்வரை தன்னை படிக்கச் சொல்கிறது
உன் முந்தைய குறுஞ்செய்திகள்..
*
கொட்டித் தீர்ப்பதற்கான
சந்தர்ப்பத்தை நோக்கி
ஊறுகிறேன் எறும்பென..
உன் வார்த்தைகளின் மீது..
தட்டி விட்டு செல்கிறாய்..
ஒவ்வொருமுறையும்
பிறிதொரு வார்த்தையால்
No comments:
Post a Comment