Friday, January 21, 2011

குறுஞ்செய்திகள்.

எப்போது திரும்புவாய் எனும் 
உத்தேசமின்றி 
காத்திருக்கச் சொல்கிறாய்..
நீ வரும்வரை தன்னை படிக்கச் சொல்கிறது 
உன் முந்தைய குறுஞ்செய்திகள்..

*

கொட்டித் தீர்ப்பதற்கான 
சந்தர்ப்பத்தை நோக்கி 
ஊறுகிறேன் எறும்பென.. 
உன் வார்த்தைகளின் மீது.. 
தட்டி விட்டு செல்கிறாய்..
ஒவ்வொருமுறையும்
பிறிதொரு வார்த்தையால்

No comments:

Post a Comment