வெப்பமயமாதல் பற்றி
அடிக்கடி கனவு வருகிறது..
தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கத்திற்காக
வேரோடு அறுத்தெறியப்பட்ட
ஆண்டுகள் பலவான மரங்களைக்
கடந்து சென்ற பயணத்திற்குப்பின் ...
கனவிலிருந்து தப்பிக்கும்
உபாயம் ஏதும் தெரியாத போது
நான் சாப்பிட்டு தூக்கியெறிந்த
மாமரத்தின் கொட்டை
கொள்ளையின் ஈரப்பதம் உள்வாங்கி
முளை விட்டிருந்தது..
அன்று முதல் நீரூற்றி வளர்க்க
ஆரம்பித்தேன்..
அதற்கடுத்த நாளிலிருந்து
அந்த கனவு வருவர்து
நின்றுவிட்டது..
No comments:
Post a Comment