Sunday, January 23, 2011

அச்சம்

அச்சம் தரக்கூடியதென 
தூரத்தில் இருந்து பார்க்கிறாய் 
என் பிரியத்தை 
மெல்ல ஊர்ந்து 
உன்னருகே நெருங்கிவர 
உற்றுப் பார்க்கிறாய் 
அதன் மெதுமெதுப்பை
ஸ்பரிசிக்கிறாய்..
கையில் தூக்கிவைத்து 
விளையாடுகிறாய்..
யாரோ உன்னை அழைக்க 
பதற்றத்தில் நழுவ 
காயங்களுடன் விட்டுவிட்டு 
வீட்டிற்குள் ஓடுகிறாய்.. 
பிறகு 
ஜன்னல் வழியாய் 
பார்த்துக் கொண்டிருந்தாய் 
வெகுநேரம் அதன் துடிப்பை.. 

No comments:

Post a Comment