Friday, January 21, 2011

மீண்டும் மீண்டும்..

இன்றும் 
துவங்கியது எனக்கான விடியல்.. 
இன்றிரவும் நிகழ்த்துவாய் 
முற்றுப் பெறுவதற்கான 
ஒரு உரையாடலை..
இன்றும் 
அணிந்து கொள்கிறேன் 
எதிர்கொள்வதற்கான கவசத்தையும் 
நாளையை நீட்டிப்பதற்கான 
சில கவிதைகளையும்.. 

*
உரையாடல்கள்
பரிமாற்றங்கள் 
விசாரிப்புகள் அனைத்தும் 
குறுகிப் போயிற்று..
பெருகி சூழ்கிறது 
அத்தனை அடக்குதளையும் 
மீறிய நேச நினைவுகள்.. 

*
என் இருத்தலின் சாத்தியம் 
குறித்து என்னைவிட 
அதிகம் கவலைப்படுகிறாய் 
அல்லது 
அவ்வாறாகக் காட்டிக்கொள்கிறாய் 

என் மரணத்திற்குப் பின்னும்.. 
எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் 
நிகழ்த்துவேன்.. 
நமக்கிடையே நிகழ்ந்த 
நேசத்தின் கனபரிமாணங்களை 
மீண்டும் மீண்டும்.. 

No comments:

Post a Comment