இருந்த ஒரே கடவுளையும்
ஏலத்தில் யாரோ எடுத்துவிட
இன்னொரு கடவுளை உருவாக்க
இரண்டு பேர் முயரிசித்துக் கொண்டிருந்தார்கள்.
எனக்கும் ஒரு கடவுளை
உருவாக்கும் ஆசை வந்தது..
சில தோல்விக்குப் பின்
அம்முயற்சியை ஒத்தி வைத்தேன்.
என் வேலையில் ஈடுபட்டேன்..
பிறர் துன்பத்திற்கு இரங்கினேன்
கொடுமைகளைத் தண்டித்தேன்
தேவைப்படுவோருக்கு உதவினேன்
எல்லோரையும் நேசித்தேன்..
மீண்டும் கடவுளை உருவாக்கும்
முயற்சியை தொடங்க நினைத்தேன்,..
அதுசரி, இன்னொரு கடவுள் எதற்கு?
நானே கடவுளானபின்
No comments:
Post a Comment