அவனிடமிருந்து
அனிச்சையாய் வெளியான
சொற்களை
சேமித்து வைக்க ஆரம்பித்தேன்..
அவன் சொற்களைத் தொலைத்த
நாளொன்றில்
அவனிடமே திருப்பித் தந்தேன்..
அவன் மறுதலித்து நின்றான்
நானும் அந்த ஒற்றையடிப்
பாதையில் விட்டுவிட்டு
திரும்பி நடந்தேன்.
அன்றைய இரவில் என் படுக்கை
முழுவதும் அந்த சொற்கள்
ஊர்ந்து நெளிந்தன..
அதன் பின்னால் அவனும்..
No comments:
Post a Comment