இரவு வந்துவிட்டால்
கிண்ணத்தில் சோற்றை பிசைந்து கொண்டு
முற்றத்தின் கட்டிலுக்கு வந்துவிடுவாள் சித்தி...
எனக்கும் தம்பிக்கும்
சோறு ஊட்டும் முயற்சியில்
அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கேற்ப
எங்கள் வாய் திறந்து உள் வாங்குவோம்
அவள் கதைகளையும் சோற்றையும்..
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்
ஒவ்வொரு கதை சொல்வாள்..
இன்றும் அதே நட்சத்திரங்கள் உள்ளன..
இன்றும் கதை சொல்கிறாள்
அவள் கிராமத்தில் இருந்தபடி
இருக்கிறது நகரத்திலும் நட்சத்திரம் பார்க்க
எனக்கொரு மொட்டைமாடி..
No comments:
Post a Comment