யாரோ தூவிச்
செல்லும் சொற்கள்
என் மீதும் ஒட்டிக் கொள்கின்றன..
தூசு ஒட்டியதைப் போல
தட்டி விடவோ
துடைத்து எறியவோ முடிவதில்லை
திரவத்தைப் போல
கழுவிடவும் கூடவில்லை..
காற்றென
மூக்கைப்பொத்தி நகரவும் வாய்ப்பில்லை..
என்னை அரித்துத் தின்னும்
சொற்களை கூறு போடும்
வழியொன்றும் புலப்படவில்லை..
ஒன்று மட்டும் தோன்றியது
என் சொற்களும் இப்படித்தான்
யார் மீதேனும் ஒட்டி
பாடாய் படுத்தக் கூடும்..
இனி வெளியே தூவுவதில்லை
என் கனமான சொற்களை
No comments:
Post a Comment