Tuesday, January 25, 2011

காயம்


சன்னலை அடைக்கையில்
நைந்த விரலின் காயம்பற்றி
உனக்குச் சொல்ல
அழைத்தேன்
நீ தூங்கியெழுந்திருப்பாய்
எனும் உத்தேசத்துடன்
அழைப்பு முழுதாய் சென்று
நின்றுவிட்டது
தவறவிட்ட அழைப்பாகவும்
உணர்த்த முயலும் தத்தளிப்பாகவும்

No comments:

Post a Comment