Tuesday, January 25, 2011

மன்னித்துக் கொள்


என் காதுகளை மூடிக் கொள்கிறேன்
மன்னித்துக் கொள்
உன் வார்த்தைகளை
செவிமடுக்கும் நிலையில்
நானில்லை

உன் பிடிவாதத்தை
பிரதிபலிக்கும் சொற்களை
கேட்கத் தயாராக இல்லை

என்னைக் குதூகலப்படுத்திய
உன் குரலே
இன்று குத்திக் கிழிக்கவும்
நேரம் பார்த்து நிற்கிறது

ஸ்பரிசித்த குரலே
பாம்பின் தீண்டலையும்
செய்யுமெனில்?
வேண்டாம்
என் செவியினை பிணைத்துக்கொள்கிறேன்
மன்னித்துக் கொள்.

No comments:

Post a Comment