Friday, January 21, 2011

மனம் - 4

இளமை வெறுத்து 
முதுமை வேண்டிய 
அவ்வையின் முடிவினை 
இப்போது நான் வேண்டி நிற்கிறேன் 
இந்த காதலில் இருந்து விடுபட.. 
=======

மணமுறிவுக்கு 
மருந்து ஆயிரம் உண்டு.. 
மீண்டும் ஒரு மண உறவு.. 
மனமுறிவுக்கு 
மருந்தில்லை 
விரும்பிய மனம்
ஏற்பதை தவிர.. 
=======

நீதான் பேசினா? 
என்று மீண்டும் 
ஒருமுறை 
என்னையே கேட்டுக் கொள்கிறேன்.. 
வசீகரமானவள் 
என்ற நீயா 
வசியம் செய்பவள் 
என சொல்லி நின்றாய்..
என் காதுகள் இன்னும் 
நம்பவில்லை.. 
அது உன் குரல்தானென..
========

நீயென் மீது 
சுமத்தியிருக்கும் பளுவை 
நீயின்றி வேறாரும் 
சுமக்க முடியாது.. 
இன்றைய அதிகாலையிலும் 
கதவோரத்தில் 
காத்திருக்கிறேன் 
இன்றேல் நள்ளிரவில் 
கனவோரத்தில் 
காத்திருப்பேன்.. 
வந்துவிடு 
என் சுமையை இடமாற்ற..
========

No comments:

Post a Comment