இளமை வெறுத்து
முதுமை வேண்டிய
அவ்வையின் முடிவினை
இப்போது நான் வேண்டி நிற்கிறேன்
இந்த காதலில் இருந்து விடுபட..
=======
மணமுறிவுக்கு
மருந்து ஆயிரம் உண்டு..
மீண்டும் ஒரு மண உறவு..
மனமுறிவுக்கு
மருந்தில்லை
விரும்பிய மனம்
ஏற்பதை தவிர..
=======
நீதான் பேசினா?
என்று மீண்டும்
ஒருமுறை
என்னையே கேட்டுக் கொள்கிறேன்..
வசீகரமானவள்
என்ற நீயா
வசியம் செய்பவள்
என சொல்லி நின்றாய்..
என் காதுகள் இன்னும்
நம்பவில்லை..
அது உன் குரல்தானென..
========
நீயென் மீது
சுமத்தியிருக்கும் பளுவை
நீயின்றி வேறாரும்
சுமக்க முடியாது..
இன்றைய அதிகாலையிலும்
கதவோரத்தில்
காத்திருக்கிறேன்
இன்றேல் நள்ளிரவில்
கனவோரத்தில்
காத்திருப்பேன்..
வந்துவிடு
என் சுமையை இடமாற்ற..
========
No comments:
Post a Comment