எனது முதல் இரவைப் பற்றி
நிச்சயமாய் எனக்கு தெரியாது ..
அவளின் அணைப்பிற்குள் இருந்திருக்கலாம்..
அவளைத் தூங்கவிடாமல் செய்திருக்கலாம்..
அவள் என் முதல் வாசம் அறிந்திருக்கலாம்..
அவள் தன் கனவுகளை என்னிடம் சொல்லியிருக்கலாம்..
ஆனால் நிச்சயமாய் தெரியவில்லை..
இதுதான் நடந்தது என்று..
சொல்வதற்கு அவளும்
இப்போது உயிரோடு இல்லை..
அதனால் நிச்சயமாய் எனக்கு தெரியாது..
நான் பூமிக்கு வந்த முதல் இரவு பற்றி..
No comments:
Post a Comment