Sunday, January 23, 2011

நிகழ்ச்சிநிரல்

நக்கான நிகழ்ச்சிநிரல் 
முன்னரே தெரிந்திருந்தது 
அழைப்பிதழ் பார்க்காமலே.. 

நீயும் நானும்
ஒரு மாலையில் சந்திப்போம்..
கண்டதெல்லாம் பேசுவோம் 
இரவுகளில் சிலாகிப்போம்..
கவிதைகள் எழுதுவோம்... 
கருத்துகள் பகிர்வோம்.. 
காதல் பற்றி முனகுவோம்.. 
குடும்பத்தை சிந்திப்போம்.. 
இப்படி எல்லாம் சரியாக 
நானறிந்த 
நிகழ்ச்சிநிரலின் படியே நடந்தது..
நான் எதிர்பார்க்காத ஒன்று 
நன்றியுரை சொல்லி 
நீ முடிப்பாய் என்பதையே..

No comments:

Post a Comment