Friday, January 21, 2011

கனவு - 3

விளையாட்டுக்குகூட 
விலகுவதாக சொன்னாலும் 
விலகி விடும் 
உயிருக்கும் உடலுக்குமான 
தொடர்பு.. 

*

"ஏதேனும் வேண்டுதல்
இருக்கிறதா " என்கிறாய்.
என் வேண்டுதல் யாவும் 
உன்னிடம்தான் என அறியாதவனா?  

*

"காதலைச் சொல்லிவிட்டாய் 
உன் கனவுகளை சொல்" என்கிறாய்.. 
என் கனவே உன் காதலால் 
என்னை நிறைக்க வேண்டும் என்பதுதானே.. 

No comments:

Post a Comment