விளையாட்டுக்குகூட
விலகுவதாக சொன்னாலும்
விலகி விடும்
உயிருக்கும் உடலுக்குமான
தொடர்பு..
*
"ஏதேனும் வேண்டுதல்
இருக்கிறதா " என்கிறாய்.
என் வேண்டுதல் யாவும்
உன்னிடம்தான் என அறியாதவனா?
*
"காதலைச் சொல்லிவிட்டாய்
உன் கனவுகளை சொல்" என்கிறாய்..
என் கனவே உன் காதலால்
என்னை நிறைக்க வேண்டும் என்பதுதானே..
No comments:
Post a Comment