Friday, January 28, 2011

குறுக்குவழி

குறுக்குவழி தெரிந்திருக்கவில்லை
இரவுகளில் உன்னை வந்தடைய
நீண்ட நேரமாய் நடந்தே வருகிறேன்
பாதி இரவுகளைக் கூட
இன்னும் நெருங்கவில்லை
இன்றயை இரவில்
அல்லது நாளைய இரவில்
அல்லது அதற்கு மறுநாள் இரவில்
வந்து சேர்ந்திருப்பேன் உன்னிடம்
அந்த நள்ளிரவில் புரண்டு படுக்கும்போது
உணர்வாய் என் ஸ்பரிசத்தை..

No comments:

Post a Comment