Friday, January 28, 2011

பயப்படாதே

பயமுறுத்துகிறது
உன் மௌனம்..
பயப்படாதே என்கிறது
உன் நினைவு..

*

பெருங்குரலெடுத்து
அழத் துணியமாட்டேன்
சந்தர்ப்பங்கள்
சாதகமாகி
எனக்கான கனவுகள்
சாத்தியமாகும் நாள் வரும்..
அதற்குள் ஏன் அழுத் தீர்க்க வேண்டும்?

*

எந்த வேறுபாடும் இல்லை
தாக்குவதற்கும் ஆயுதமும்
காப்பதற்கு மருந்தும்
கொடுக்கிற
நாட்டிற்கும் உனக்கும்.. 

1 comment:

  1. பயமுறுத்துகிறது
    உன் கவிதை
    சந்தர்ப்பங்கள்
    சாதகமாகி
    உனக்கான‌ கனவுகள்
    சாத்தியமாகும்
    நாள் வரும் தோழி
    அன்புடன்
    சக்தி

    ReplyDelete