தாத்தாவுக்கு
காதல் கவிதைகள் எழுதினால் பிடிப்பதில்லை..
தம்பிக்கு கவிதைகளே பிடிப்பதில்லை..
தங்கைக்கு எப்போதாவது பிடிக்கும்
அப்பாவுக்கு எப்போதுமே பிடிப்பதில்லை
அம்மாவுக்கு எழுத்தைப் பற்றி
எந்த கருத்தும் இல்லை..
இப்படியான நிலையில்
கவிஞராய் இருப்பது ஒரு சாபமே..
No comments:
Post a Comment