இந்த உடலைக்
கடந்துவிட்டால்
விடுதலை கிடைத்துவிடும்
அனைத்துத் தளைகளிலிருந்தும்...
மீண்டும்
நானொரு குழந்தையாய் பிறப்பேன்
உனது குடும்ப உறவுகளில் ஒருத்தியாக
உன்னைப் பார்த்தபடியே வளர்ந்திருப்பேன்
உன் மடிமீது ஏறி விளையாடுபவளாக
உன் தலைமுடியைக் கலைப்பவளாக
உன் கன்னத்தில் முத்தமிடுபவளாக
உன் அக்காவின் மகளாகவோ
உன் அத்தையின் மகளாகவோ
மீண்டும் பிறப்பேன்
இப்போது கடந்துவிடுகிறேன்
நீ விரும்பாத இந்த உடலை மட்டும்
என் ஆன்மாவை
உனக்கு பாதுகாப்பாய் விட்டு...
No comments:
Post a Comment