என் பெருங்கனவின்
கோப்பையில்
நீ ஊற்றுகிறாய்
உன் வார்த்தைகளை
ஒரு அமிலமென..
உள்ளே இருக்கும்
காரத்துடன் சேர்ந்து
அது சமநிலையாகிறது..
*
செயலிழந்து வருகிறது
உனது நிலைப்பாடு..
வடிவம் பெறுகிறது
எனது நிலைப்பாடு..
உன் நிலையும்
என் பாடும்
சொல்லி மாளாது
இருவரின் முதுமையிலும்..
*
என்னை அழ வைத்து
வேடிக்கை பார்க்க
விருப்பப்படும்
உன் அறிவுக்கு
தெரிவதில்லை...
உள்ளுக்குள் அழுதழுது
மரத்துப் போயிருக்குமென் உணர்வு.
No comments:
Post a Comment