Friday, January 28, 2011

கறாரான வார்த்தை

நீ இந்நேரம்
தூங்கியிருக்கக் கூடும்..
நான் இன்னும் தூங்கவில்லை
ஆனபோதும்
விடியத்தான் போகிறது..
இருவருக்கும் ஒன்றாக..

*

கேள்வித்தாளை வாங்கியவுடன்
விறுவிறுவென்று
பதில் எழுதிட வேண்டுமெனும்
வேகத்துடனே இருக்கிறது..
உன் கறாரான வார்த்தைகள்..
ஆற அமர
ஓடியாடித் திரும்பும்
பள்ளிக் குழந்தையென
துள்ளிக் குதிக்கிறது என் வார்த்தைகள்.



No comments:

Post a Comment