Friday, January 21, 2011

சொல்லை பந்தாடி


நகர்கிறது 
வாகன நெரிசலடங்கிய 
நூறடி பாதையிலும் 
போக்குவரத்தற்ற 
கிராமத்தின் சாலைகளிலும்...

புன்னகைக்கிறது
விதைக்கும் போதே 
பேரம் பேசும் 
பெரு வணிகத்திலும்
விளைந்த பின்னும் 
பேரமின்றி 
கொடுத்துச் செல்லும் 
சிறு வணிகத்திலும் 

அழுகிறது 
ஆயிரம் பேர் 
கூடியிருக்கும் கூட்டத்தின் மத்தியிலும் 
யாருமற்ற இரவின் தனிமையிலும் 

விளையாடுகிறது 
ஒரு சொல்லை பந்தாடி 
சுக்குநூறாக்கியும்..
ஒரு கனவை உருவாக்கி 
தகர்த்தும்..

அமைதியாகிறது 
தேற்ற யாருமில்லாத போதிலும் 
தோற்ற வேதனையின் மிச்சத்திலும்.. 

சுழன்றாடுகிறது 
வென்றுவிடுவதெனும் தீர்மானத்துடனும் 
கட்டுக்கடங்காத வேகத்துடனும்.. 

எல்ல்லாம் வாய்த்திருக்கிறது 
நீ நினைப்பதற்கும் 
நான் நிகழ்த்துவதற்கும் 
மத்தியில்.. 

No comments:

Post a Comment