Tuesday, January 25, 2011

தனிமை


மரத்துப் போய்விட்ட
என்னை
எப்போதும் மீளமைக்க முடியாது
உன் காதலாலும் ..
*

உயிர்த்திருப்பதற்கான
உபாயமொன்றை
உனக்கு தெரிந்திருந்தால்
தைரியமிருந்தால்
அருகில் வந்து சொல்..
இல்லையெனில்
அங்கேயே நில்..
வருகிறேன்..
எனக்கு தெரிந்த உபாயமொன்றை
உனக்கு சொல்ல..
*

நான் விரும்பாத எதுவும்
தேவை இல்லை
உன் நெருக்கமும்
உன் விலகலும் கூட..
*

ஆயுள் முழுமைக்கான
வலியினை விட
ஒரு அந்தி நேரத்தின்
ஒற்றை மகிழ்வு போதும்..
உன் கையிலிருந்து
தவற விழ மாட்டேன்..
இந்த பூமியில்..
என் வானம் நீயான பின்..
*

அள்ளித் தர
முடியாவிட்டாலும்
கிள்ளியாவது கொடு
சிறிதளவு காதலை
*

என் தனிமைக்குள்
அதிகம் வந்து போனது
நீயாகத்தான் இருக்க முடியும்..
என் தனிமை
உன்னால்தானே அளிக்கப்பட்டது
அந்த நள்ளிரவு பேச்சுக்கு பின்..
*

காதல் இரந்து
பெறக் கூடியதில்லைதான்..
காதல் இறந்துவிடக் கூடாதே
*

புத்தி கேட்டு போய்விட்டதாக
சொல்கிறாய்
உண்மைதான்
உன்னைக் காதலிக்கிறேனே.

No comments:

Post a Comment