என் வேலைகளை
சரியாக செய்ய வேண்டும்
என் தோழிகளிடம்
சிரித்து பேச வேண்டும்
என் தம்பியோடு
விளையாட வேண்டும்
என் காலைப் பொழுதை
ரசிக்க வேண்டும்..
என்னை மீண்டும்
அழகாக பார்க்க வேண்டும்
என் கவிதைகளை
தொடர்ந்து எழுத வேண்டும்
என் ஆய்வுப் படிப்பை
மேற்கொள்ள வேண்டும்
என் ஆரோக்கியத்தை
தக்க வைக்க வேண்டும்
என் இரவுகளில்
நிம்மதியாய் தூங்க வேண்டும்..
எல்லாவற்றுக்கும்
உன்னை மீண்டும் நான்
அடைய வேண்டும்
No comments:
Post a Comment