முதல் காதல் வெற்றி பெற
வேண்டுமென்ற
அவசியமில்லை என்கிறாய்..
நீ என் கடைசிக்காதலென
அறியாமல்..
============
உன் விசாரிப்புகளை
பகிர்வுகளை
மீண்டும் துவக்கும் போது
எந்த தடையுமின்றி
என்னிடம் வரும் போது
என் வலிகளுக்கு
உன் ஸ்பரிசத்தால்
மருந்திடும்போது
முன்னிரவுகளைப் போல்
கருத்தரிக்குமென் இரவு..
=======================
வாக்குறுதி எனும்
காப்பீட்டை
நீ வழங்காததால்
கேட்கமுடியவில்லை
எனக்கான இழப்பீட்டை
=====================
வாகனத்தில் செல்லும்போது
வந்துமோதும்
வாடைக்காற்றாய்
உன் நினைவுகள்..
=================
ஏதும் கொடுத்துப்
பழக்கமில்லாத நீ
என் இதயக்கூரையை
பிய்த்துக்கொண்டு கொடுக்கிறாய்
கடும் வலியை...
================
No comments:
Post a Comment