Friday, January 21, 2011

ஆசை(3)

அனாதையாய்
திரியுமென் எழுத்துக்களை 
காப்பற்றலாம் 
நானில்லாத நாளிலும்.. 
உன் அன்பிற்கேங்கும் 
என் நேசத்தை 
எப்படி காப்பாற்றுவாய் 
நானில்லாத போது?
வாழ்தலின்றி.. 
==========
எனக்காகவும் வேண்டாம் 
உனக்காகவும் வேண்டாம் 
தனித்தழும் 
காதலின் குரலுக்காவது 
செவி கொடு..
உனக்கு துணையிருக்கும்..  
நீ உடல்வலிமையிழந்த காலத்திலும்..
==========
அவ்வப்போது 
மழித்துவிடுகிறாய் 
மீசையை மட்டுமின்றி 
என் மீதான ஆசையையும்.. 
===========

No comments:

Post a Comment