உனது கரங்களால்
ஆசிர்வதிக்கப்படாத
என் உணர்வுகள்
மீளத் துடிக்கிறது
யாவற்றிலுமிருந்து..
சபித்துக் கொண்டே
பிடிதளர்த்த மறுக்கிறாய்..
ஒரு சாபத்தையும்
ஒரு ஸ்பரிசத்தையும் வைத்து
வாழ்ந்திடக் கூடியதல்ல..
எனது நான்..
==========
உலகை மாற்ற அல்ல
உன்னை மாற்றவாவது
என் கவிதை
நெருப்பு பற்ற வைக்குமெனில்
அதன் சாம்பலில்
மிச்சமிருக்கும் என் காதல்..
==========
No comments:
Post a Comment