Friday, January 21, 2011

நம்பிக்கை

எந்த உத்திரவாதமுமின்றி 
நகரும் என் பொழுதுகள் 
எந்த உறுதியுமில்லாது
நீ சிந்தும் புன்னகை 
எந்த நிர்பந்தமுமின்றி 
பெருக்கெடுக்கும் நேசம்
ஏதோ ஒரு காரணத்தால் 
மறைக்கப்படும் உண்மை 
எதற்கும் துளியளவு கூட  
சந்தேகமில்லை 
நீயும் நானும் 
கொண்டிருக்கும் 
நம்பிக்கை பற்றி.

No comments:

Post a Comment