உனக்கான
வரையறைகளை
தகர்ப்பது குறித்து
யோசிக்கிறேன்..
எனக்கென
ஒரு வரையறையுடன்..
===========
*
பராமுகமாயிருக்கும்
உன்னிடம்
மண்டியிட்டு வேண்டி நிற்கிறேன்
என்னையாவது
எனக்கு திருப்பி தருவாயென
===========
*
அவதானிக்க முடிகிறது
உனக்குள்ளிருக்கும்
அத்துணை தர்க்கங்களையும்
நீ முகமூடி தரித்திருக்கும் போதும்.
===========
*
என் சுயம்
தொலைத்த நாட்களை
நன்கறிந்த நீயேதான்
அதற்கு
காரணமான நீயேதான்
எப்படி தொலைக்கலாம்
என கேள்வியும் கேட்கிறாய்..
என் சுயம் இப்போது
செத்துக் கிடக்கிறது
உன் கேள்வியில்..
============
*
என் நேசம்
காத்துக் கிடக்கிறது
ஒரு ஒப்பந்தத்திற்காக மட்டும்..
=============
*
விரட்டிக் கொண்டே இருக்கிறது
உன் நினைவுகள்
வானுயர்ந்து
கடல் கடந்து
ஆயிரமாய்
ஆட்கள் அருகிருந்த போதும்..
=============
*
உன் கௌரவத்தை
தாக்குவதாக
அமைந்துவிடாதென் காதல்
உன் மீதான
காதலே கெளரவமானது அன்பே..
==============
No comments:
Post a Comment