Friday, January 21, 2011

மௌனங்கள்

ஆண்டன் செகாவின் 
செர்ரிப் பழத்தோட்டத்தில் 
முப்பத்தைந்து மௌனங்கள் 
இருக்கின்றன.. 
உனக்கும் எனக்குமிடையில் 
இருக்கும் நேசத்தோட்டமோ
மௌனத்தாலானது..

*

காதலிக்கிறவர்கள் எல்லாரும் 
கவிதை எழுதுபவர்கள் அல்ல..
கவிதைகள் எழுதுபவர்கள் 
எல்லாரும் காதலிப்பவர்கள்..

No comments:

Post a Comment